Loading

Udal Valartheney Uyir Valartheney

By:

நான்‌ மருத்துவன்‌ அல்ல. மாநகரத்தில்‌ வசிக்கும்‌ ஒரு சாமான்ய மனிதன்‌.
கிராமத்தில்‌ வளர்ந்து மாநகரத்தில்‌ பிழைப்பு தேடி வந்து குடியமர்ந்தவன்‌. மருந்துகளே இல்லாமல்‌ உணவை மட்டுமே சரியாக உண்டு வாழ்ந்து விட்டுப்போன எனது பாட்டியை பக்கத்திலிருந்து பார்த்தவன்‌. அதற்கு நேர்மாறாக பசிக்க வேண்டும்‌ என்று ஒரு மாத்திரை, செரிக்க வேண்டும்‌ என்று ஒரு “சிரப்‌” என்று உணவிற்கு முன்னும்‌ பின்னும்‌ என மருந்துகளை முழுங்கும்‌ அடுக்ககங்களில்‌ எங்களோடு குடியிருக்கும்‌ அடுத்த வீட்டு மனிதர்களின்‌ அல்லல்களைப்‌ பார்த்து அதிர்ந்து போனவன்‌.